நெல்லை : தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 2 மாதங்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெல்லை மற்றும் ஈரோடு மண்டலங்களில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்தது. அந்த சமயத்தில் 2 மண்டலங்களில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்த காற்று சீசனில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியானது.
இப்போது ஆடி மாதம் முடிய உள்ளதால் தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 422 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்நிலையில் நேற்று காற்று வீசுவது குறைந்ததால் காற்றாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு 800 மெகாவாட் குறைந்து ஆயிரத்து 610 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. எனவே தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை : தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 2 மாதங்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெல்லை மற்றும் ஈரோடு மண்டலங்களில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்தது. அந்த சமயத்தில் 2 மண்டலங்களில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்த காற்று சீசனில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியானது. இப்போது ஆடி மாதம் முடிய உள்ளதால் தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 422 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்நிலையில் நேற்று காற்று வீசுவது குறைந்ததால் காற்றாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு 800 மெகாவாட் குறைந்து ஆயிரத்து 610 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. எனவே தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|