சீனாவில் பணிபுரியும் தமிழர்கள் இணைந்து தமிழ் சங்கமம் என்ற கலாச்சார அமைப்பினை கடந்த ஏப்ரல் 14 ந்தேதி தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் சார்பில் பெய்ஜிங்கில் தொடங்கப்படும் இரண்டாவது அமைப்பு இதுவாகும். மேலும் சீனாவில் தொடங்கப்படும் முதல் தமிழ் அமைப்பு இதுவாகும். இந்த புதிய தமிழ் அமைப்பை சீன சர்வதேச வானொலியின் தமிழ்ச்சேவைப் பிரிவில் பணிபுரியும் சீனரான மரியா மைக்கேல் தொடங்கி வைத்தார். இதன் ஆரம்ப விழாவில் பீஜிங்கில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை மற்றும் மலேசியாவை சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் கலந்துகொண்டனர். தமிழர்களின் திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுவது, கலந்துரையாடுவது, தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பீஜிங் தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தமிழ் சங்கமத்தை தொடக்கி வைத்த மரியா மைக்கேல் கூறினார்.
|