LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்- இங்கல்ல; ஜப்பானில்!

உலகின் முதல் கண்டுபிடிப்பால் ஒரு தமிழர் சாதித்து உள்ளார். அவரது சாதனையை ஜப்பான் அரசு அங்கீகரித்து உள்ளது.

இந்த சாதனையின் பின்னணியை அறிந்து கொள்வோம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஒரு இயந்திரப் பொறியாளர் ஆவார். குமாரசாமி, முழுவதுமாக தண்ணீரிலேயே இயங்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
 இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வகையில் இயங்குவதுதான் இதன் சிறப்பு அம்சம். 

குமாரசாமி இது பற்றிக் கூறியதாவது:

“இந்த இயந்திரத்தை கண்டுபிடிக்க எனக்குப் பத்து ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இந்த அம்சம் கொண்ட கண்டுபிடிப்பு இதுதான் முதல் முறை. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக்க எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும்.

இதை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதுதான் எனது பெரும் கனவு. அதற்காக இங்குள்ள பல நிறுவனங்களின் கதவுகளைத் தட்டினேன். ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதன் பிறகு என் திட்டத்தை ஜப்பான் அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். அவர்கள் உடனடியாக எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். 

விரைவில் இது ஜப்பானில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புகிறேன்”,  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த அரிய இயந்திரத்தை கண்டுபிடித்த குமாரசாமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  அவர் ஒரு தமிழர் என்பதால் வலைத்தமிழ் அவரை மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றது.

by   on 16 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.