128. தலைவன் கூற்று
128. தலைவன் கூற்று
பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று -1: அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. கூற்று – 2: உணர்ப்புவயின் (உணர்ப்பு = தெளிவிக்கப்படுகை) வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம் – 1: தலைவியைக் குறியிடத்தில் காணாமல் திரும்பும்போது தன் நெஞ்சை நோக்கி, “ நீ கிடைத்தற்கு அரிய ஒன்றை விரும்பி, அதை அடைய முடியாததால் துன்பப்படுகிறாய்.”, என்று தலைவன் கடிந்துகொள்கிறான். இங்கு ”நெருங்கி” என்ற சொல்லுக்கு, “இடித்துரைத்து” அல்லது “சினந்து” என்று பொருள்.
கூற்று விளக்கம் – 2: நெஞ்சே! இவளின் ஊடலுக்குக் காரணமாகக் கூறிய குற்றங்கள் என்னிடம் இல்லைஎன்று நான் தெளிவாகக் கூறிய பிறகும் இவள் ஊடல் தணியவில்லை. இவள் அடைவதற்கு அரியவள். “உணர்ப்புவயின் வாரா ஊடல்” என்பது தலைவன் தன்னிடம் குற்றமில்லை என்று தெளிவாக உணர்த்திய பிறகும், தலைவி ஊடலைத் தொடர்வதைக் குறிக்கிறது. |