|
||||||||
டேப்லெட் என்பதற்கு வரைப்பட்டிகை என்னும் சொல் சரியா.. |
||||||||
தமிழ் அறிஞர் கருணாநிதி முகநூலில் இட்டுள்ள தம் நிலைக்கூற்றில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால் எல்லார்க்கும் ஆர்வமும் அக்கறையும். எடுத்த எடுப்பில், இச்சொல் பொருத்தம்தானா என்ற ஐயம் எனக்கும் எழுந்தது. இறங்கி ஆராய்ந்தேன் !
முதலில் ‘வரை’ என்ற சொல்லைப் பற்றிப் பார்ப்போம். வரை என்பதற்கு மலை, வரம்பு, எல்லை ஆகியன நாம் நன்கறிந்த பொருள்கள். அவைமட்டுமல்ல. விரல் அளவு, கோடு, எழுத்து ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. ஓவியம் வரைந்தேன்’ என்பதில் வரை என்ற சொல் கோடிழுப்பதைக் குறிக்கிறது. கவிதை வரைந்தேன் என்பதில் வரை என்ற சொல் எழுதியதைக் குறிக்கிறது. அடி உதை என்பன வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆவதுபோல் ‘வரை’ என்ற சொல் வினையும் ஆகும், பெயரும் ஆகும். விரல் அளவிடத்தால் தீண்டப்படும் கோடு, எழுத்து என்ற விரிவில் ‘வரை’ என்ற சொல் மிகப்பொருத்தமே.
அடுத்து பட்டிகையைப் பார்ப்போம். பட்டிகை என்பதற்கு ‘மார்புக்கச்சை, மேகலை, தெப்பம், தோணி, சீந்திக்கொடி, சித்திரக் கம்பி, தாழை ஆகிய பொருள்களுடன் ‘ஏடு’ என்ற பொருளும் உண்டு. அரச பத்திரங்கள் பட்டிகைகள் எனப்பட்டுள்ளன. நாம் ஏடு என்ற பொருளைத் தேர்ந்துகொள்ளலாம். ஏடு என்றால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கவேண்டியதில்லை. பனையேடு, செப்பேடுகள் உண்டு. எடுபடும் என்பதால் அது ஏடு.
வரைப்பட்டிகை - கோடுகள் எழுத்துகள் எல்லாம் விரல் அளவுக்குள் தோன்றுகின்ற ஏடு’ என்ற பொருள் வருகிறது.
ஆக, டேப்லெட் (Tablet) என்பதற்கு ‘வரைப்பட்டிகை’ என்ற தமிழாக்கம் மிகப் பொருத்தம்தான் !
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்
தமிழ் அறிஞர் கருணாநிதி முகநூலில் இட்டுள்ள தம் நிலைக்கூற்றில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால் எல்லார்க்கும் ஆர்வமும் அக்கறையும். எடுத்த எடுப்பில், இச்சொல் பொருத்தம்தானா என்ற ஐயம் எனக்கும் எழுந்தது. இறங்கி ஆராய்ந்தேன் ! முதலில் ‘வரை’ என்ற சொல்லைப் பற்றிப் பார்ப்போம். வரை என்பதற்கு மலை, வரம்பு, எல்லை ஆகியன நாம் நன்கறிந்த பொருள்கள். அவைமட்டுமல்ல. விரல் அளவு, கோடு, எழுத்து ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. ஓவியம் வரைந்தேன்’ என்பதில் வரை என்ற சொல் கோடிழுப்பதைக் குறிக்கிறது. கவிதை வரைந்தேன் என்பதில் வரை என்ற சொல் எழுதியதைக் குறிக்கிறது. அடி உதை என்பன வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆவதுபோல் ‘வரை’ என்ற சொல் வினையும் ஆகும், பெயரும் ஆகும். விரல் அளவிடத்தால் தீண்டப்படும் கோடு, எழுத்து என்ற விரிவில் ‘வரை’ என்ற சொல் மிகப்பொருத்தமே. அடுத்து பட்டிகையைப் பார்ப்போம். பட்டிகை என்பதற்கு ‘மார்புக்கச்சை, மேகலை, தெப்பம், தோணி, சீந்திக்கொடி, சித்திரக் கம்பி, தாழை ஆகிய பொருள்களுடன் ‘ஏடு’ என்ற பொருளும் உண்டு. அரச பத்திரங்கள் பட்டிகைகள் எனப்பட்டுள்ளன. நாம் ஏடு என்ற பொருளைத் தேர்ந்துகொள்ளலாம். ஏடு என்றால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கவேண்டியதில்லை. பனையேடு, செப்பேடுகள் உண்டு. எடுபடும் என்பதால் அது ஏடு. வரைப்பட்டிகை - கோடுகள் எழுத்துகள் எல்லாம் விரல் அளவுக்குள் தோன்றுகின்ற ஏடு’ என்ற பொருள் வருகிறது. ஆக, டேப்லெட் (Tablet) என்பதற்கு ‘வரைப்பட்டிகை’ என்ற தமிழாக்கம் மிகப் பொருத்தம்தான் ! நன்றி : கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|