நாடாளமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 130 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 24 ஆம் தேதி நடக்கவிருப்பதால் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மதுபானக் கடைகள் நம் நாட்டின் குடிமகன்களால் நிரம்பி வழிந்தன. வழக்கமாக இரவு 10 மணி வரை செயல்படும் கடைகளில் நேற்று இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகளில் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 130 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|