LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டாஸ்மாக் மதுவில் கலப்படத்தை தவிர்க்க விரைவில் வருது பார் கோடு ரசீது !

தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க பார் கோடு ரசீது முறை விரைவில் துவங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் 6,800க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் போலி மது விற்பனை, மது பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பது, மதுவை அதிக விலைக்கு விற்பது போன்ற செயல்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடுவதாக, தமிழக குடிகாரர்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இதனை அடுத்து  அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பது, உறுதி செய்யப்பட்டது. மேலும் முறைகேடு செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க பார் கோடு பில்லிங் மெஷின் கருவியை மதுக்கடைகளில் பொறுத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், மதுபாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள, அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல், மதுபாட்டில்களை விற்க முடியாது. மதுபாட்டில்களில் கலப்படம் செய்யும் மதுக்கடை ஊழியர்கள், மதுபாட்டில் மூடியின் வழியாக சிரிஞ்ச் மூலம் மதுவை எடுத்து, காலி மதுபாட்டில்களில் நிரப்புகின்றனர். தண்ணீர், புகையிலை நீர் போன்றவற்றை அதில் கலந்து விற்கின்றனர். இந்த "ஸ்கேனர்' பில்லிங் கருவி மூலம், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மதுபாட்டில்களை மீண்டும் "ஸ்கேன்' செய்தால், அதை கம்ப்யூட்டர் ஏற்று கொள் ளாது என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

by Swathi   on 24 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.