பள்ளி ஆசிரியர்கள் பாடம் சொல்லிகொடுத்தால் மட்டும் போதும், உணவு சமைப்பதை அவர்கள் கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பீகாரில்,பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் நாடெங்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள், மதிய உணவு சமைப்பதை கண்காணிக்க வேண்டும் எனவும், அவர்களே சாப்பிட்ட பின்னர் குழந்தைகளுக்கு பரிமாற வேண்டும் என சில மாநில அரசுகள், உத்தரவிட்டன. இந்நிலையில் உத்திர பிரதேசத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த பிரதானச்சாரியா பரிஷித் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவது மட்டுமே; மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரித்தலை கண்காணிப்பது அல்ல என தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த அதிருப்தி அடைந்துள்ளது தேவையற்றது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
|