கிராம புறங்களில் வசித்து வரும், குடும்பங்களுக்கு இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் 2.5 கோடி தொழிலாளர்களுக்கு, இலவச செல் போன்கள் வழங்கவும். அரசு பள்ளிகளில் படிக்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன் துவங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, தொலைதொடர்பு துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான தொலை தொடர்பு ஆணையம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இத்திட்டத்திற்கு தொலைதொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியது. மேலும் இந்த திட்டம் விரைவில், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும் என தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
|