LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் தமிழகம் முழுவதும் 44,121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 33,665 மனைகளும்,22,600 கட்டிடங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை 1 லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கடைசியாக, கடந்த 2016-ம் ஆண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிர்ணயம் தொடர்பான நோட்டீஸ் ஒரு ஆண்டுக்கு பிறகே வாடகைதாரர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது . இதனால், வாடகை தாரர்கள் வாடகையை செலுத்துவதிலும் தாமதம் செய்துள்ளனர் .

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வாடகை பாக்கியை வசூல் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாடகை பாக்கியை நீண்டகாலமாக செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் .


இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நியாய வாடகை நிர்ணயம் செய்வது குறித்த முன்மொழிவுடன் நியாய வாடகை குறித்து வாடகைதாரர்களுக்கு அனுப்பிய அறிவிப்பு கடிதம் மற்றும் நிராகரிக்கப்பட்டதற்கான கடிதம் இணைக்கப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட நியாய வாடகை கணக்கீட்டை உதவி கோட்ட பொறியாளருக்கு சமர்பித்து அதில் அவரின் மேலொப்பத்துடனும் மாவட்ட பதிவாளர் மேலொப்பத்துடனும் இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும்படி செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

by Swathi   on 17 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.