LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு 1-ந் தேதி முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு முறை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் கடந்த 9ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து மத்திய அரசு  பணிக்கு தேர்வு செய்யப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல்  அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அல்லது அதற்கு பிறகு அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

இதன்படி ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு முறையின் கீழ்   இடம்பெறாத ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதற்காக அவர்கள் வருமானம் மற்றும் சொத்து தொடர்பான தேவையான ஆவணங்களை தாசில்தார் அந்தஸ்துக்கு  குறையாத அதிகாரியிடம் சமர்ப்பித்து அவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு  வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 25 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.