|
||||||||
தாலப்பருவம் |
||||||||
858 முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து
மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து
பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய
நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி
தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர்
தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந்
திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.
(1)
859 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார்
வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி
யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று
மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று
மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு
மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத்
தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2)
(2)
860 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன
னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ
லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ்
தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3)
(3)
861 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற்
கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண்
யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு
மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து
தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித்
தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு
சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4)
(4)
862 அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங்
கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு
மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5)
(5)
வேறு.
863 உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு
மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும்
கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங்
காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு
மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு
மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத்
தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ
தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(6)
864 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை
மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை
விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே
மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும்
வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம்
வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய்
தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ
தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(7)
865 நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய்
நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின்
முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ
முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற்
பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும்
பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க
தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ
தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(8)
866 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப்
பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி
னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி
ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப
நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா
னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந்
தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ
தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(9)
867 நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே
நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத
வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும்
வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண்
முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு
முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத்
தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ
தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(10)
858 முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர் தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந் திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (1) 859 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார் வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத் தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2) (2) 860 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல் வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ் தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3) (3) 861 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற் கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண் யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித் தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4) (4) 862 அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக் கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங் கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும் விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5) (5)
வேறு. 863 உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும் கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங் காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத் தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ. (6) 864 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும் வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம் வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய் தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ. (7) 865 நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய் நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின் முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற் பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும் பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ. (8) 866 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப் பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந் தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ. (9) 867 நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும் வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண் முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத் தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|