LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

தாலப்பருவம்

 

858 முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து 
      மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து 
பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய 
      நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி 
தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர் 
      தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந் 
திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ 
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.
(1)
859 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார்
      வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி
யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று
      மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று
மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு
      மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத்
தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2)
(2)
860 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன
      னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
      வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ
      லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ்
தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3)
(3)
861 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற்
      கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண்
யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு
      மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து
தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித்
      தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு
சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4)
(4)
862 அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
      யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங்
      கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு
      மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5)
(5)
வேறு.
863 உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு
      மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும்
கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங்
      காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு
மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு
      மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத்
தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(6)
864 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை
      மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை
விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே
      மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும்
வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம்
      வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய்
தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(7)
865 நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய்
      நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின்
முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ
      முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற்
பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும்
      பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க
தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(8)
866 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப்
      பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி
னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி
      ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப
நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா
      னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந்
தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(9)
867 நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே 
      நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத
வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும்
      வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண்
முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு
      முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத்
தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(10)

 

858 முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து 

      மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து 

பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய 

      நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி 

தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர் 

      தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந் 

திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ 

      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.

(1)

859 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார்

      வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி

யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று

      மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று

மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு

      மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத்

தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ

      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2)

(2)

860 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன

      னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி

வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்

      வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ

      லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ்

தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ

      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3)

(3)

861 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற்

      கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண்

யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு

      மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து

தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித்

      தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு

சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ

      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4)

(4)

862 அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி

      யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்

கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங்

      கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்

விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு

      மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி

செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ

      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5)

(5)

 

வேறு.

863 உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு

      மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும்

கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங்

      காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு

மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு

      மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத்

தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ

      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.

(6)

864 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை

      மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை

விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே

      மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும்

வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம்

      வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய்

தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ

      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.

(7)

865 நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய்

      நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின்

முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ

      முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற்

பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும்

      பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க

தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ

      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.

(8)

866 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப்

      பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி

னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி

      ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப

நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா

      னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந்

தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ

      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.

(9)

867 நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே 

      நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத

வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும்

      வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண்

முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு

      முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத்

தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ

      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.