LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தலைவனுக்கேற்ற தொண்டன்

இன்றைய அரசியல் சூழல்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு , உண்மையான தொண்டன் யார் ? என்று அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை . தமது அரசியல் உயர்விற்காகத் தொடர்வண்டி நிலையத்தில் பலநூறு பொது மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கி வரவேற்ற தொண்டன் கூடத் தனது தலைவனை எதிர்த்து ஒரு தனிக்கட்சி தொடங்கும் அவல நிலையைத் தமிழகத்தில் காண முடிகிறது . ஆனால் , எந்தச் சூழலிலும் தம்மை மாற்றிக் கொள்ளாமல் பெருந்தலைவர் காமராசரைத் தலைவராக ஏற்று நடந்து கொண்ட கக்கனை , அரசியல் உலகம் வியப்புடன் நினைத்துப் பார்க்கிறது .

1967 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து , அத்தேர்தலில் கட்சி பெற்ற இடர்பாடுகளை ஆராய்ந்து , மாநிலப் பொறுப்பாளர்களை நியமனம் செய்யப் பெருந்தலைவர் காமராசர் முனைப்பாகச் செயல்பட்டார் . மாநிலத் தலைவராகத் திரு . சி . சுப்பிரமணியம் அவர்களையும் , கக்கனைத் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாயின . 1955 ஆம் ஆண்டு மாநிலத் தலைவராகவும் அதன்பின் அமைச்சராகவும் இருந்து கட்சியில் மூத்த தலைவர் என்ற நிலையை அடைந்த கக்கனை சி . சுப்பிரமணியம் அவர்களின் கீழ்த் துணைத்தலைவராக நியமனம் செய்வதைக் கக்கனின் மீது அன்பு கொண்ட பாரமலை போன்ற பல தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அதனால் திரு . பாரமலை , கக்கனைச் சந்தித்து ‘இந்த உதவித்தலைவர் நியமனத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது . மூத்த தலைவரான உங்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது’ என்று வாதிட்டார் . ஆனால் , கக்கன் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை . ‘ பெருந்தலைவரை நம் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் . தலைவர் என்ன ஆணையிடுகிறாரோ அதை ஏற்று நடைமுறைப்படுத்துவதே ஒரு தொண்டனின் கடமை’ என்று கூறிவிட்டார் என்றாலும் , திரு . பாரமலை பெருந்தலைவரைச் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினார் . ‘ நீ சொல்வதெல்லாம் சரிதான் எனக்கும் அது தெரியாமல் இல்லை . ஆனால் , அவர் தேர்தலில் தோற்று சென்னையில் இருக்க இடமின்றி இருக்கிறார் . அவர் தொடர்ந்து அரசியல் நடத்தவும் அவரைச் சென்னையில் தங்க வைக்கவும் இதைத்தவிர அரசியலில் வேறு வழி எனக்குத் தெரியவில்லை . உனக்குத் தெரிந்தால் சொல்’ என்றார் காமராசர் . காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த பதவியான அகில இந்திய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் கக்கன் என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது எத்துணை அளவு பெருந்தலைவரின் தனிப்பட்ட பார்வை இருந்தது என்பதைப் பாரமலை இன்றும் நினைவு கூறுகிறார் .

தாம் மூத்த கட்சித்தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் பெருந்தலைவரால் கொடுக்கப்பட்ட தமிழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வந்தார் . தலைவரின் ஆணை தொண்டனின் கடமை என்ற அளவில் அவரை வைத்து கொண்டாரே தவிர வேறு எந்தவித உயர்வு தாழ்வு என்ற சிந்தனைக்கும் தமது மனத்தை ஆட்படுத்திக் கொள்ளவில்லை .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.