LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

தம்பிக்கு ஒரு பாட்டு

 

தம்பிக்கு ஒரு பாட்டு

~~~~~~~~~~~~~~

கபடியாட்டம் பாண்டியாட்டம் ஆடி ஏறியாச்சே அப்போ

கணினியாட்டம் கைப்பேசிஆட்டம் என்று மாறியாச்சே இப்போ

தம்பி ஆட்டமெல்லாம் மாறியாச்சே இப்போ!

 

குதிச்சிப்போட்ட ஆட்டத்தாலே நோயே ஓடிப்போச்சே அப்போ

கணினிபார்த்து ஆட்டத்தாலே கண்ணுப் பார்வை போச்சே இப்போ

தம்பி கண்ணுல பார்வை போச்சே இப்போ!

 

தொங்கியாட ஆலம்விழுது இருந்ததடா அப்போ 

எங்கும் பார்க்க அலைபேசிகம்பியா இருக்குதடா இப்போ

தம்பி மரமெல்லாம் கம்பியா இருக்குதடா இப்போ..

 

கேப்பகூழு கம்பங்கூழு குடிச்சதெல்லாம் அப்போ

நொறுக்குத்தீனி துரிதஉணவு மாறிப்போச்சு இப்போ

தம்பி மாறிப்போச்சே இப்போ!

 

காலாற நடந்துபோன காலமடா அப்போ

கார்ல கடைக்கு போற கோலமடா இப்போ

தம்பி கலிகாலமடா இப்போ!

 

ஆடியோடி செஞ்ச வேலையால உடம்பு உறுதியாச்சு தம்பி

அசையாம நீயும் கிடந்தால உடம்பு ஊதியாச்சு தம்பி

 

முன்ன போனதெல்லாம் போகட்டுன்டா தம்பி

இனி வளர்ச்சியத உருப்படியா

பாத்துக்கோடா தம்பி

 

ஓடியாடி விளையாடிடடா தம்பி

கூழும் சோறும் சாப்பிடுடா தம்பி

மரங்கள நட்டுவச்சி நலமா வாழுடா தம்பி

ஆரோக்கியநலத்தப் பேணுடா தம்பி-இப்போ

வரும் காலமும் உள்ளங்கையில் தம்பி

உலகமே உன் கையில் தம்பி!

 

விஜயகுமார் வேல்முருகன்..

 

by Vijayakumar   on 26 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.