LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தம்பியே ஆனாலும் தகுதி வேண்டும்

அன்று திரு . ஐ . ஜி . அருள் தமிழகத்தின் காவல்துறைத் தலைவராக ( இன்ஸ்பெக்டர் ஜெனரல் ) இருந்தார் . அவ்வமயம் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகள் ஓய் . எம் . சி . ஏ . விளையாட்டு மைதானத்தில் நடந்தது . அதில் 800 மீட்டர் , 1500 மீட்டர் ஒட்டப் பந்தயங்களில் முதல் பரிசு பெற்ற கக்கனின் தம்பி விஸ்வநாதனைப் பார்த்த , அந்த நிகழ்ச்சியின் தலைவரான ஐ . ஜி . அருள் , ‘ அவ்வளவு திறமை வாய்ந்த நீ ஏன் காவல்துறையில் சேரக்கூடாது ?’ என்ற கேள்வியைக் கேட்டார் . மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களுடன் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கச் சொன்னார் .

அவரது ஆலோசனைப்படி விஸ்வநாதனும் விண்ணப்பித்தார் . விளையாட்டு வீரர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் காவல்துறைத் துணை ஆய்வாளர் பணியிடத்திற்கு விஸ்வநாதனை நியமனம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் அருள் . வேலையில்லாமல் இருக்கும் விஸவநாதனுக்கு இது மிகப்பெரிய செய்தியாகவும் உதவியாகவும் தோன்றியது . அந்த மகிழ்ச்சியைக் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார் . எப்படியோ இந்தச் செய்தி அமைச்சர் கக்கன் செவிகளுக்கு எட்டியது . உடனே காவல்துறை உயர் அதிகாரியான அருள் ஐ . ஜி . அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தார் . ‘ நல்ல விளையாட்டு வீரன் என்கிற முறையில் நான் உதவினேன்’ என்று அருள் சொன்னதும் ‘அவனது தகுதி தெரியாமல் நியமனம் செய்வது முறையா’ ? என்று கேட்டார் . அதிகாரி அருளுக்கு விளங்கவில்லை . ‘ விஸ்வநாதனின் வலதுகை விரல்கள் சரியாக செயற்படாது . அதனால் அவனால் துப்பாக்கி சுட முடியாது . அந்த நிலையில் குறையுடையவனை நாட்டின் பாதுகாவலர் பணிக்குத் தெரிவு செய்யலாமா’ ? என்ற கேள்வியையும் கேட்டு வழங்கவிருக்கும் ஆணையை நீக்கம் செய்யவும் ஆணையிட்டார் .

உதவி ஆணையாளர் பணிக்கு அனைத்துத் தகுதிகளும் கொண்ட விஸ்வநாதன் அதன்பின் ஐ . ஜி . அருளைச் சந்தித்தார் . இளமையில் விளையாடும் போது தவறி விழுந்ததையும் , வலது முழங்கையின் மேற்புறத்தில் அறுவைச் சிகிச்சை நடந்ததையும் அதனால் ஏற்பட்ட பின்விளைவால் சுண்டு விரலும் அதற்கு அடுத்த மோதிரவிரலும் சற்று வளைந்து இருப்பதையும் காட்டி விளக்கினார் . அதைக் கண்ட ஐ . ஜி . அருள் ‘இதற்காகவா அமைச்சர் அப்படிக் கூறினார்’ என்று வருந்தினார் .

தமக்கு அப்பணி கிடைக்கவில்லை என்பதில் அன்று மனம் வருந்திய விஸ்வநாதன் இன்று தமது அண்ணனின் உண்மையான உள்ளத்தைப் போற்றி மகிழ்கிறார் .

கக்கன் , தன் தம்பி என்றும் பாராமல் சிறுகுறை கூட இல்லாத தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே அப்பதவியைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததைப் பொதுமேடைகளில் பலர் நினைவுகூர்கின்றனர் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.