LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தம்பியே ஆனாலும்..

தியாகி கக்கன்ஜி நினைவுக் கல்வி கலாச்சார மன்றம்’ என்ற ஓர் அமைப்பின் தொடக்க விழா சென்னை தேவநேயப் பாவாணர் மத்திய நூலகக் கட்டடத்தில் எளிமையாக நடந்தது . விழாவைத் தொடங்கி வைத்த கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் சொன்ன செய்தி .

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக , உணவு அமைச்சராக , காவல் துறை அமைச்சராக , இப்படிப் பல இலாகாக்களின் அமைச்சராகக் கக்கன் பணிபுரிந்திருந்தாலும் , அவரை யாரும் முன்னாள் அமைச்சர் என்று குறிப்பிட்டது கிடையாது . அவரைத் தியாகி கக்கன்ஜி என்றே அழைத்து வந்தனர் . அமைச்சர் பந்தா எதுவும் இல்லாமல் மந்திரியாக இருந்தவர் அவர் . எனக்கு வேலை கிடைக்கும் வரை கொஞ்ச நாள் நான் எனது சகோதரர் கக்கனின் வீட்டில் ( அமைச்சர்களுக்கான பங்களாவில் ) தங்கியிருந்தேன் . கொஞ்சநாளில் எனக்கு நெடுஞ்சாலைத் துறையில் வேலை கிடைத்தது . எனக்கு வேலை கிடைத்த செய்தி எனது சகோதரர் கக்கனுக்குத் தெரியாது . நான் வேலையில் சேர்ந்த பிறகும் எனது சகோதரரின் பங்களாவிலேயே தங்கியிருந்தேன் . நான் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த என் சகோதரர் , ‘ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? என்று என்னைக் கேட்டார் . அப்போதுதான் நான் , இரண்டு வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்குச் சேர்ந்த விவரத்தைச் சொன்னேன் . உடனே ‘அரசாங்க ஊழியனாகி , அரசு ஊதியம் வாங்கத் துவங்கிய பிறகு அமைச்சர் வீட்டில் இருப்பது தவறு . உடனே புறப்படு’ என்று எனது பெட்டி படுக்கை எல்லாம் மூட்டை கட்டி அந்த நள்ளிரவில் என்னை வெளியே அனுப்பிவிட்டார் . ‘ நள்ளிரவு ஆகிவிட்டது’ எங்குப் போய்த் தங்குவது ? காலையில் போய்விடுகிறேன்’ என்று கெஞ்சியும் கூட அவர் பிடிவாதமாக என்னை வெளியேற்றி விட்டார் என்றார் .

இதைக் கேட்டபோது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.