|
||||||||
தமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க |
||||||||
அக்டோபர் 15 2018: தமிழ்மொழியை மீட்டெடுக்கவும், தமிழ் பெயர்களை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தல், தனித்தமிழில் பேசுதல், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மொழி வளர்ச்சியை ஊக்குவித்தல், தொய்வான துறைகளில் தமிழ் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல நோக்கங்களை முன்னிறுத்தி "தமிழியக்கம்" தொடக்கவிழா அதன் நிறுவனத் தலைவர் விஐடி வேந்தர் திரு. விஸ்வநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் சென்னையில் மிகச்சிறப்பாக நடந்தது. தமிழியக்கம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றி அதன் நிறுவனர் - தலைவர் கோ.விசுவநாதன் அவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மற்றும் தமிழியக்கத் துணைத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் தொடங்கிவைத்தனர். இந்நிகழ்வில் உலகின் பல நாடுகளின் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள், துணைமுதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள் , கல்வியாளர்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அனைவரும் கலந்துகொண்ட மிகப்பெரிய தொடக்கவிழாவாக அமைந்தது. இதை வலைத்தமிழ் உலகத் தமிழர்களுக்கு முகநூலின் வழியே நேரடியாக தொகுத்து வழங்கியது. காணொளிகள் தொடந்து பதிவுசெய்யப்படும்.. உலகத் தமிழர்களின் நிகழ்வுகளை உடனுக்குடன் பெற வலைத்தமிழுடன் இணைந்திருங்கள் www.Facebook.com/ValaiTamil , www.YouTube.com/ValaiTamil , www.YouTube.Com/ValaiTamilTV .
|
||||||||
by Swathi on 16 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|