தனிஒருவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் மிருதன்.
இந்த படத்தை நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவருகிறார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன்முறையாக லட்சுமி மேனன் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்று சொல்லுகிறார்கள் படக்குழுவினர். மேலும் தமிழில் வெளியாகும் முதல் சோம்பிக்கள் (சோம்பிக்கள் என்பவர்கள், கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் யாரையாவது கடித்தால் கடிபட்டவரும் சோம்பி ஆகிவிடுவார். அறுபதுகளில் இதுபோன்ற கதைகள் அமெரிக்காவில் எழுதப்பட்டது) சார்ந்த கதை என்றும் கூறப்படுகிறது. மிருதன் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துவரும் இப்படத்திற்கான தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றிருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
முன்னதாக பாலாவின் தாரைதப்பட்டை, பாண்டிராஜின் இது நம்ம ஆளு, விஷால் நடிக்கும் கதகளி, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்படமும் பொங்கல் ரேஸில் களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|