|
||||||||
தனிமை |
||||||||
தனிமைஇமை யகலும் கணத்திலும் துணையில்லை இமை சேரும் நேரத்திலும் பயமில்லை ! உள்ளுள்ளோர் எல்லாம் யாரோ வாகினரே யானன்றி யாவரும் புதிதாய் தெரிந்தனரே ! கீச்சிடும் குருவிகளும் விட்டுச் சென்றனவே வீட்டின் தோட்டப் பசுமைகளும் பகையானதுவே ! மூன்றாங்கை உறவுக்கும் உள்ளில் வஞ்சமாகியதே இரண்டாமுயிர் நட்பெல்லாம் புறத்தே விட்டுச்சென்றதே ! தனியே தனித்திருந்தும் தனிமையும் இன்பமே கண்ணில் தென்படா காற்றுப் படுகையிலே ! தன்னோர் தனித்த னுப்பியதும் சுகமானமே உயிராதார நீரில் பாதம் நனைகையிலே ! மகிழ் மறப்பினும் மலர்முகத்தில் மகிழ்ச்சியே பிடித்தும் பிரிந்ததை எண்ணத்தில் நிறுத்தையிலே ! தரணியே தடைசெய்து தனியே பிரிப்பினும் தமிழுள்ள வரை தனிமையும் இனிமையே !! - இளங்கவிஞா |
||||||||
by Ilankavignaa ( Yune Udhayakumar ) on 17 Sep 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|