|
||||||||
தனித்தன்மைகள் - பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||
ஒருவருடன் ஒருவரினை ஒப்பு நோக்கின் ஒப்புமையால் விளைவதெல்லாம் காழ்ப்பே யன்றோ ஒருவரிடம் உள்ளகுணம் அவரின் பண்பு ஒருவர்தம் தனிப்பண்பே அவரைக் காட்டும் ! இருவரிடம் ஒத்தபண்பு இருந்த போதும் இருவருடை தன்மைகளும் ஒத்தி ராது பெருமைமிகு இவ்வுலகில் ஒவ்வொன் றுக்கும் பெயர்சொல்ல அடையாளம் இருக்க வேண்டும் !
இளங்கோவைக் கம்பனுடன் ஒப்பு நோக்கல் இருவேறு துருவத்தை இணைத்தல் போலாம் குளத்தோடு குளத்தையன்றி ஏரி போன்று குளமில்லை எனப்பேசல் மடமை யன்றோ ! உளந்தன்னைத் தொடுகின்ற பாக்க ளுக்குள் உள்ளசுவை வேறுவேறு இன்பம் வேறு வளமான கூத்தன்போல் இல்லை யென்று வசைபாடல் அறியாதான் கூற்றே யன்றோ !
முல்லைக்கும் மல்லிக்கும் மணமோ வேறு முகிழல்லி தாமரைக்கும் அழகோ வேறு வில்வயிலை புல்லுக்கும் குணமோ வேறு விளையும்நெல் கம்புக்கும் சுவையோ வேறு ! நல்லதொரு கரையான்புற் றுக்கும் தேனீ நறவுசேர்க்கும் தேனடைக்கும் நுட்பம் வேறு எல்லோரும் அவரவரின் தன்மை யாலே ஏற்றவர்தாம் அதையறிந்து போற்று வோமே ! |
||||||||
by Swathi on 08 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|