தஞ்சை வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,'' என, அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.
கர்நாடக இசை உலகில், உன்னதமான இடத்தைப் பெற்றது, தஞ்சாவூர் வீணை. தஞ்சையில், 17ம் நூற்றாண் டில், ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில், புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட் டது. இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாத வீணை என்றும் பெயர் பெற் றது.40 ஆண்டு விளைந்த பலா மரத்தின், அடி மரத்தில் இருந்து, வீணை செய்யப் படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப் பட்டுள்ளது. தஞ்சாவூரில், அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய் காந்தி கூறியதாவது; கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசு, இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது
அதன்படி, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. துவக்கத்தில், ஒவ்வொரு ராகங்களுக்கும், ஒரு வீணை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின், 17ஆம் நூற்றாண்டில், தஞ்சை ஆண்ட ரகுநாத மன்னர் ஆட்சியின் போது, அனைத்து ராகங்களும் இசைக்க கூடிய வகையில், ஒரு வீணை தயாரிக்கப் பட்டது. தற்போது, நூற் றுக்கும் மேற்பட்ட கலை ஞர்கள், தஞ்சாவூர் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.மேலும், பல்வேறு கைவினை மற்றும் பாரம் பரிய பொருட்களுக்கு புவி சார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சை நெல் மாலை, தஞ்சை சீரகசம்பா, கும்பகோணம் வெற்றிலை, திருபுவனம் பட்டு, திருவை யாறு அசோக அல்வா, தஞ்சை மரக்குதிரை, தஞ்சை ஓவியம் ஆகியவற்றுக்கும், புவிசார் குறியீடு பெறுவதற் கான நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது, என்றார்.
|