LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1300 - கற்பியல்

Next Kural >

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
தேவநேயப் பாவாணர் உரை:
தாம்உடைய நெஞ்சம் தமர் அல்வழி-நம் உறுப்பாகவுள்ள உள்ளமே ஒருவர்க்கு உறவல்லாத விடத்து; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்-அயலார் உறவல்லாதவராக இருத்தல் மிக எளிதாகக் காணக்கூடிய செய்தியே யாகும். புறத்தி யொருத்தியைக் காதலியென்று கருதி என் உள்ளமே என்னை வருத்தும்போது, அப்புறத்தி புலக்கின்றதில் என்னை வியப்புள்ளது என்பதாம், ’தமர்’ ஆகுபொருளி. ’தஞ்சம்’ எளிமைப் பொருளிடைச் சொல். தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே ." (தொல். சொல். இடை. 18.)
கலைஞர் உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
Translation
A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own!.
Explanation
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
Transliteration
Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya Nenjam Thamaral Vazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >