LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

தன்மனை வரைதல்

மணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையிற்
செவிலியை வினாதல்
371.
தீவண மேனிச் சிதம்பர வீசர் திருக்கலைசைப்
பூவண மாதைநம் மாமனைக் கேவந்து பூஞ்சிலம்பர்
காவண மிட்டுக் கலியாணாஞ் செய்தற்கென் கண்ணனையாய்
ஆவணஞ் சென்றினிக் கூறினென் னாங்கவ ரன்னையர்க்கே. 1

செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்
372.
எம்மின்ன றீர்க்குஞ் சிதம்பர வீச ரெழிற்கலைசை
நம்மினத் தார்க்குநற் றாய்க்குமன் னேயென்னை நாஞ்சொல்லுவோம்
அம்மின் னிடைமட வாளைநன் னாளி லதுலரவர்
தம்மின் மணம்புணர்ந் தாரென்று தூதர்கள் சாற்றினரே. 2

வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்.
373.
உற்றார்கள் வந்துநின் றாற்ற மணநல முங்கணெய்தப்
பெற்றா யிழைதென் கலைசைத் தியாகர் பிறங்கலன்னே
நற்றாயைக் காணிய விம்மனைக் கேயந்த நாதன்பின்னே
பற்றாய் வருவளென் றொற்றர்முன் வந்து பகர்ந்தனரே. 3

தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை
நுமர்க்கியம்பு சென்றென்றல்.
374.
கங்கைச் சடையர் கலைசைத் தியாகர் கமலமலர்ச்
செங்கைத் தழல்புரை தீமுன்ன ரெல்லாச் சிறப்புமுற
மங்கைக் கியான்மங் கலநாண் புனைந்தது வார்குழலாய்
சங்கைப் படாதுன் றமரான யாவர்க்குஞ் சாற்றுகவே. 4

தானது முன்னே சாற்றினன் என்றல்.
375.
பாண்டரங் கஞ்செய் கலைசைத் தியாகர் பழமலைமேல்
ஆண்டகை யாயெம் மணங்கைக் கொணர்ந்துன் னணிமனைவாய்க்
காண்டகு முன்பெருங் கேண்முன்னர் நீமங் கலத்திருநாண்
பூண்டதன் றேயறிந் தன்னைக் கியம்பினன் பூரிக்கவே. 5

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.