|
||||||||
தன்னம்பிக்கை மிகுந்த தலைவர் |
||||||||
படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் சிலர் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் . அவர்களைச் சந்தித்த ஒரு நிருபர் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார் . எதிர்காலத்தில் என்ன ஆவோம்னு எங்களுக்கே தெரியவிலலை என்றார்கள் . தன்னம்பிக்கை இல்லாததால் வந்த தகராறு இது . ஒருவர் இன்னொரு இளைஞரிடம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் . அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று பதில் வந்தது . அப்பா என்ன செய்கிறார் ? என்ற அடுத்து கேள்விக்கு அப்பா சும்மாதான்இருக்கிறார் என்று பதில் வந்தது . உழைப்பில் நம்பிக்கையில்லாததால் வந்த விளைவு இது . பெருந்தலைவர் காமராசர் தன்னம்பிக்கையின் சிகரமாகவே திகழ்ந்தார் . எந்த நிலையினும் துன்பத்தைக் கண்டு துவளும் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை . 1967 இல் காங்கிரஸ் செல்வாக்கு இழக்க , காமராசரும் தோற்றுப் போகிறார் . மாற்றுக் கட்சித் தலைவர்கள் கூட பெருந்தலைவர் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென்றே வருந்தினர் . ஆனால் பெருந்தலைவர் அதைத் தோல்வி என்று எண்ணாமல் ஜனநாயகத்தின் வெற்றி என்றே மகிழ்ந்தார் . இத்தகைய சிந்தனை மாபெரும் தலைவருக்கே ஏற்படும் . திரு . லால்பகதூர் சாஸ்திரி பிரதமராய் இருந்த போது , டெல்லியில் தங்கியிருந்த பெருந்தலைவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்ட்டது . அதிலிருந்து தப்பிய பெருந்தலைவர் தன்னம்பிக்கை இழக்கவில்லை . அரசியலைத் துறக்கவிலலை . தாக்க வந்தவர்களைக் கோபித்து அறிக்கையும் விடவில்லை . அவரது பணிகளில் வேகம் கூடியதே தவிரக் குறையவில்லை . கட்சியில் சேர்ந்து உடனே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்களைப் பார்த்து அவர் சொன்னார் . “ என்னால் காத்திருக்க முடியாது . உடனே பதவியில் உட்கார வேண்டுமென்றால் முடியுமா ? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு நாளைக்கே அறுவடை செய்ய வேண்டுமென்றால் சாத்தியப்படுமா ? ” “ நேற்று இன்று நாளை என்று முக்காலத்தையும் உணர்ந்து வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க வேண்டும் ” என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார் . தான் தளராமல் இருப்பது மட்டுமல்ல . தன்னை நம்பியிருப்பவர்களையும் தளரவிடாமல் பாதுகாப்பவர் பெருந்தலைவர் . ஒருமுறை நாகப்பட்டினம் ஒய் . எம் . சி . ஏ - யின் சார்பில் பாரதியாரின் படத்திறப்பு விழா ஒன்று நடந்தது . அனந்தராமன் என்பவர் பாரதியாரின் பாடல்களைப்பாடுமாறு பணிக்கப்பட்டார் . பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் என்ற பாடலைப் பாடி வரும் போது ஓரிடத்தில் மறதியால் பாட முடியாமல் திண்டாடினார் அவர் . உண்மைகள் செய்வோம் பல வன்மைகள் செய்வோம் என்று அந்த வரியை மேடையிலேயே எடுத்துக்கொடுத்தார் பெருந்தலைவர் . அவையோர் அனைவரும் ஆச்சரியப்பட்டனர் . நம்பிக்கை இருந்தால் நதி மீதும் நடைபோடலாம் வெம்பி வீழாமல் விதியையும் வெல்லலாம் எம்பிக்குதித்து நிலாவுக்கு ஒரு முத்தம்கொடுக்கலாம் அத்தகைய நம்பிக்கையின் நாயகராகத்திகழ்ந்தவர் பெருந்தலைவர் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|