LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட தந்தை பெரியாரின் 136 வது பிறந்த நாள்

நேற்று (Sep 13th) மெரிலாந்து மாநிலத்தில் எல்க்ரிட்ஜ் நூலகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. Periyar International of Washington D. C. என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விழா இங்கு கொண்டாடப்படுகிறது.


பிற்பகல் 3:30 மணியளவில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி கல்பனா மெய்யப்பனின் வரவேற்புரையோடு விழா தொடங்கியது.


சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாண்புமிகு பாரிஸ் கிளிடென்னிங் (Hon. Parris Glendenning, Ex-Governor) (முன்னாள் மேரிலாந்து மாநில ஆளுநர்) பெண்களின் சம உரிமைகள் குறித்து ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார்.


திரு. ஹேமந்து மேத்தா (Mr. Hemant Mehta from Secular Student Alliance) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அமெரிக்கச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை விளக்கி உரையாற்றினார்கள். பின்பு கேள்வி நேரத்தில் பல வினாக்கள் எழுப்பப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


பிறகு உள்ளூர் நண்பர்கள் பெரியார் குறித்த வினாக்களை வந்திருந்தவர்களிடம் கேட்கப்பட்டது. அதன்பின்பு அந்தக் கேள்விக்குறிய விளக்கங்களை நமது நண்பர்கள் ஒரு குறுவுரையாக எடுத்துரைத்தார்கள்.


1. மருத்துவர் சரோஜா இளங்கோவன் பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துகளை எடுத்து விளக்கினார்கள்.


2. முனைவர் சொர்ணம் சங்கர் பெரியாரின் வைக்கம் போராட்டத்தை விளக்கி ஒரு உரையாற்றினார்.


3. முனைவர் அரசு செல்லைய்யா பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.


4. மருத்துவர் சோம இளங்கோவன் தீண்டாமை/சாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகளை எடுத்துக் கூறினார்.


5. தந்தை பெரியாரின் மறுமலர்ச்சி சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு தத்துவம் போன்றவை பொதுமக்களை சென்றடைய நாம் என்ன செய்ய வேண்டுமென சில புதிய கருத்துகளை ச. பார்த்தசாரதி விளக்கினார்.


திரு. சுந்தர் குப்புசாமி இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தி கொடுத்தார். திரு. கொழந்தவேல் இராமசாமி மற்றும் நாஞ்சில் பீற்றர் இருவரும் இந்த நிகழ்ச்சியை அமைத்து கொடுத்தனர். நன்றிவுரையோடு கூட்டம் 5:45 மணிக்கு முடிவுற்றது.

periyar1
by Swathi   on 16 Sep 2014  0 Comments
Tags: தந்தை பெரியார்   Thanthai Periyar   Periyar Birthday Celebration              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.