LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

தாயம் விளையாட்டு

தோற்றம் மற்றும் வளர்ச்சி :

தாய விளையாட்டு பெண்கள் விளையடும் அக விளையாட்டுகளில் முக்கியமானது ஆகும். தாய விளையாட்டின் தோற்றம் போரில் படை வீரர்களை நகர்த்தி செல்வது போன்ற செயல்களை வெளிப்படுத,துவதாக அமைகிறது. கட்ட விளையாட்டின் பண்புகள், அதிகளவில் தாய விளையாட்டில் காணப்படுகிறது. ஆனால் ஆண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு அறிவுத்திறனை மையமாகக் கொண்டது. பெண்கள் விளையாடும் தாயகட்ட விளையாட்டு வாய்ப்பு நிலையை மையமாக்க் கொண்டது. இவ்விரு விளையாட்டுகளும் போர் முறைகளை விளக்குவதாக அமைந்துள்ளன.கட்ட விளையாட்டிலிருந்து தாய விளையாட்டு வேறுபட்டிருந்தாலும், கட்ட விளையாட்டின் வளர்ச்சி தாய விளையாட்டின் தோற்றத்திற்கு உதவியாக இருந்திருக்ககூடும். தாய விளையாட்டிலிருந்து பகடை, தசாபதம், அஷ்டாபதம், சதுரங்கம், (செஸ்) தோன்றி இருப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. குறைந்தது இரண்டு பேர்கள் விளையாடும் விளையாட்டு இது.

பெயர்க்காரணம் :

' தாயம் ' என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள் உண்டு. உறவுகாரர்களை தாயத்தார் என்று கூறுவது இதற்குச் சான்றாகும்்இதைப் பற்றிய குறிப்புகள்
தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் பந்தயம் கட்டுவார்கள். அப்பந்தயம் பொருள் தங்களை வந்தடைய வேண்டுமென்று உரிமை கருதி ஈடுபடுவதால் 'தாயம்' என்ற பெயர் வந்திருக்கலாம்.சோழிகளை குலுக்கி போடுகையில் 'ஒன்று' விழுந்தால் 'தாயம்' என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற எண்களை இரண்டு, மூன்று என்றறே கூறுவது குறிப்பிடதக்கதாகும்.நடைமுறையில் நாம் ஒரு செயலைக் காணலாம். ஒரு தொழிலைத் தொடங்கும் போது 'இலாபம்' என்று கூறுகின்றனர் அவற்றை போலவே தாயம் என்ற சொல்லும் தானே வெற்றி பெற வேண்டும்.என்ற ஒரு சொல்லாகவும் நாம் இதைக்கருதலாம்.

விதிமுறைகள் :

சோழியில் முதலில் 'தாயம்' போட்டால்தான் காய்களை கட்டத்தில் வைத்து தொடங்க முடியும்.சோழிகளில் விழும் எண்களுக்குத் தகுந்தவாறு வலப்புரமாக காயினை நகர்த்தி வரலாம். எதிரியின் காய்களை குறியீடு இல்லாத கட்டங்களில் சுற்றும்போது வெட்டிவிடவேண்டும்.ஒருவர் காயிருக்கும் கட்டத்தில் இன்னொருவரின் காயினை வைக்க நேர்ந்தால் அதற்கு வெட்டுதல் என்று பெயர்.வெட்டினால்தான் காய் உள்கட்டத்திற்குள் செல்லவியலும். குறியிடப்பட்ட கட்டம் எவருக்கும் சொந்தமில்லை. யாருடைய காய் வேண்டுமனாலும் குறியீட்டுக் கட்டத்தில் தங்கலாம். நான்கு அல்லது ஆறு காய்களை யார் முதலில் பழமாக்குகின்றாரோ அவர் வெற்றி பெற்றவராவார்.மேலும் இந்த விதிமுறைகள் ஒவ்வொரு வகை தாய வரைபடத்திற்கேற்ப மாறுபடும்.

நான்கு சோழிகள் எண்ணிக்கை விதிமுறை எண்ணிக்கை
1. நான்கு சோழியும் கவிழ்ந்திருந்தால் 8
2. மூன்று கவிழ்ந்து ஒன்று திரும்பியிருந்தால் 1
3. இரண்டு கவிழ்ந்தும் இரண்டு திரும்பியிந்தால்2
4. ஒன்று கவிழ்ந்திம் மூன்று திரும்பியிருந்தால் 3
5. நான்கு சோழியும் திரும்பியிருந்தால் 4

இவற்றில் 8,1,4 விழுந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு இவ்விதிமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும்.

வகைகள் :

தமிழக கிராம்ப்புரங்களில் தாய விளையாட்டில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஐந்து வகைகள் குறிப்பிடத்தக்கவை. நான்கு கட்ட தாயம், தஞ்சாவூர்க் கட்டம், குரங்காட்டம் போன்றாவையாகும்.

பயன்கள் :

தாய விளையாட்டின் வாயிலாக பல அறிவுத்திறன் சார்ந்த செயல்கள் அதிகரிக்கின்றன. காய்களை நகர்த்துவதற்கு நுண்ணிய அறிவுத்திறன் தேவைப்படுகிறது. எதிரியின் காய்களை வெட்டுவதற்கு அதிகமான சிந்தனைத்திறன் தேவைப்படுகிறது. கணித அறிவு வளர்வதற்கும் தாய விளையாட்டு உறுதுணையாக அமைகிறது. தாய விளையாட்டில் அறிவுத் திறன் மட்டுமின்றி வாய்ப்புநிலை இயல்பும் உள்ளடங்கியது என்று குறிப்பிடத்தக்கது.

நன்றி : தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் மேம்பாட்டுக் கழகம்

by Swathi   on 24 Jan 2015  0 Comments
Tags: Thayam game   Thayam Vilayattu   தாயம்   தாயம் விளையாட்டு           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.