LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அடையாளம் தெரியாதவர்களிடம் பெறும் நன்கொடை அளவை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து கட்சிகள் பெறக்கூடிய நன்கொடையின் அளவை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது  ரூ.20 ஆயிரம் வரை நன்கொடையாக பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கு கணக்கு காட்ட தேவை இல்லை. ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வாங்கினால் மட்டும் கணக்கு காட்ட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29சி - 1951 ன்படி இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ‘நன்கொடை பெறுவதில் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நன்கொடை வாங்குவதில் கட்டுப்பாடுகள் தேவை. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29 சி.யில் திருத்தம் செய்ய வேண்டும்’

இவ்வாறு கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.  இந்த நிலையில், மத்திய  சட்ட அமைச்சகத்துக்கு இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இப்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. 

அதில், ‘அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து  ரூ.20 ஆயிரம் வரை கணக்கு காட்டாமல் நன்கொடை பெறலாம் என்பது முறைகேடுக்கு வழி வகுக்கும். ஏனெனில், இதை ரொக்கமாக வாங்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அதுபோன்ற நிலைமையைத் தடுக்க, இந்த நன்கொடையின் அளவை ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 18 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.