LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக வினித்கோத்தாரி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக வினித் கோத்தாரி பதவியேற்றார்.அவருக்கு தலைமை நீதிபதி தாஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.  தற்போது, உயர்நீதிமன்றத்தில், 60 நீதிபதிகள் உள்ளனர். 15 இடங்கள் காலியாக உள்ளன. 

சமீபத்தில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டார்.  இதையடுத்து இந்த பணியிடத்திற்கு, தற்போது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும், வினித் கோத்தாரியை நியமனம் செய்து ஜனாதிபதி ஆணை வெளியிட்டார்.

இதையடுத்து வினித்கோத்தாரி நீதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி தாஹில் ரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக நீதிபதி வினித் கோத்தாரியை வரவேற்று அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயணன் பேசினார். இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள், புதிய நீதிபதியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

நீதிபதி வினித் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 1984ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து ராஜஸ்தான் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சுமார் 20 ஆண்டுகள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் வழக்குகளில் ஆஜரான இவர், 2005 ஜூன், 13ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

பின்னர் 2016 ஏப்ரல் 18- ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.இவர் அரசியல் அமைப்பு சட்டம், நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். வினித் கோத்தாரி பதவி ஏற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. 

பதிவியேற்றபின் வினித் கோத்தாரி பேசும்போது, 

இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த நீதிமன்றம் 3 தலைமை நீதிபதிகளையும் 20 நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு தந்து உள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி என்ற நிலை இருக்கக்கூடாது. அதற்காக வக்கீல்கள் நீதிபதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.