LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது!

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வசதிக்காக கருவூல கணக்கு ஆணையரகம் தரவு தளத்தை அமைத்து உள்ளது.

ஓய்வூதியம் பெற்ற விவரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்து பெறுதல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப் பயன்கள் வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற பல விவரங்களை கருவூலங்களை அணுகாமலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்னை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்த தரவு தளத்தை தமிழ்நாடு அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் உருவாக்கி உள்ளது.

இதன் மூலம், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விபரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முன்பணம், புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் குடும்பநல நிதிபிடித்தங்கள் போன்ற விவரங்களையும் தங்களது ஓய்வூதிய கொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

இது தவிர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களை இத்தரவு தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கருவூலங்களிலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையிலும் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் தமிழக அரசின் சுமார் 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.

ஓய்வூதியர் தரவுதளத்தினை https://tnpensioner.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். 
இந்த தரவு தளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

by Mani Bharathi   on 21 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.