|
|||||
தமிழில் பெயர்ப் பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க தொழிலாளர் துறை திட்டம்! |
|||||
தமிழில் பெயர்ப் பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க தொழிலாளர் துறை திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிற் சட்டம் வலியுறுத்துகிறது. கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழைத்தவிர ஆங்கிலமோ, பிற மொழியோ இடம்பெற வேண்டும் என விரும்பினால் 5:3:2 என்கிற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம் என சலுகையாக, அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்கள் குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழில் பெயர்ப் பலகை வைக்க ஒரு மாத காலம் அவகாசம் தந்ததோடு, குறைந்த பட்சமாக.ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் ரூ.100 அபராதம் மட்டுமே செலுத்திவிட்டு, பெயர்ப் பலகையை தமிழில் மாற்றாமல் இருந்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை இரு துறைகளும் கூறியுள்ளன. அதுமட்டுமின்றி, தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம் என மாவட்ட ஆட்சியாளர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அரசின் ஒப்புதலைக் கேட்டு உள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்த பின்பு, தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. |
|||||
by Mani Bharathi on 08 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|