“ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நோயே ஆங்கில மனப்பான்மையாகும் “ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளா கோவாவில் நடந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது: "ஆங்கிலம் ஒரு நோய் என நான் கூறியதாக சில ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆங்கிலம் ஒரு மனநோய் என்று நான் கூறவில்லை. ஆங்கிலம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், ஆங்கில மனப்பான்மை என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்ற ஒரு நோயாகும். ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். ஆனால், தாழ்வு மனப்பான்மையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் உயர்ந்தவர்கள், என்கிற எண்ணத்தைக் கொடுத்துச் சென்று உள்ளனர். இந்த மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். இந்த நாட்டின் உயர்ந்த பாரம்பரியம் நமது கடந்த காலம் மற்றும் உயர்ந்த தலைவர்களை கொண்டுள்ளதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இந்தியா எந்த நாட்டினாலும் தாக்கப்படவில்லை. ஆனால், படையெடுப்பாளர்களால் அது சிதைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டும் நம்மை அழிக்கவில்லை. மனரீதியாகவும் அழித்துவிட்டனர். சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
|