அடுத்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி துறையில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார். மக்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் கூறியதாவது: தேசிய உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு உற்பத்தி துறை மூலம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய உற்பத்தி கொள்கை தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும்.தொழில் ஒழுங்கு முறைகளை எளிமை படுத்தவும், தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலங்களை உருவாக்க வும், பசுமை தொழில் நுட்பங்களையும், சிறிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற இளைஞர்களின் தொழில் திறைமைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.தொழில்துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க அன்னிய நேரடி முதலீடு மிகவும் உதவியாக இருக்கும்.
|
The Federal Government is planning to create employment for 1 million people in The manufacturing sector in the next 10 years.Speaking yesterday in response to a question in Lok Sabha, A quarter of the national production through the manufacturing sector, with the aim of making the national manufacturing policy.To promote industrial development and foreign direct investment will be of great help,he said. |