LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வரி செலுத்துவது தான்! வெங்கையா நாயுடு பேச்சு!

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வரி செலுத்துவது தான் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

கோவையில், இந்திய தொழில் வர்த்தக சபையின் (சேம்பர்) 90வது ஆண்டு விழா  நடந்தது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு தபால்உறை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது:

"நான் தற்போது எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சொந்தமானவன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டபோதும் மக்கள் சேவையில் ஓய்வுபெறவில்லை. கோவை, திருப்பூர் நகரங்களில் ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு தொழில் சிறப்பாக நடக்கிறது. 

மக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஸ்மார்ட்சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் பங்களிப்பை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும். 

கோவை, திருப்பூர் நகரங்களில் தொழில்முனைவோர் மற்றும் அறிவுத்திறன் நிறைந்தவர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், தொழில் துறையில் இம்மாவட்டங்கள் முன்னோடியாக இருக்கின்றன. இம்மாவட்ட மக்கள் கடினமாக உழைக்கின்றனர்.

உலக அளவில் தற்போது  காலநிலை மாற்றம் என்பது பெரும் சவாலாக உள்ளது. கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையிலும், அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் நிலத்தடி நீர்மட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது.

இயற்கை மீது அன்பு செலுத்த வேண்டும். இயற்கையை பாதுகாப்பது நம் கடமை. ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது, துவக்கத்தில் பல பிரச்னை இருந்தாலும், தற்போது நல்ல பலனை அளித்துள்ளது. ஜி.எஸ்.டியால்தான் நாடு முழுவதும் வரி சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்துவதுதான் அடித்தளம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் முகவரியுடன் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

நாட்டில் தற்போதும் தீண்டாமை இருந்து வருகிறது. 20 சதவீத மக்கள் வருமானம் இல்லாமலும், 25 சதவீத மக்கள் கல்வி அறிவு பெறாமலும் உள்ளனர். இதனை மாற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஊழல், முறைகேடு நாட்டின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. ஊழலை ஒழித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்.கோவையில் இருந்து வெளி நகரம் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிப்பது தொடர்பாக இந்திய வர்த்தக சபை சில கோரிக்கை வைத்துள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு  வெங்கையா நாயுடு பேசினார்.

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.