ரூ.40,000 கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அமைப்பான பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய கப்பல் படைக்கு, ரூ.40,000 கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனத்துடன், இந்திய பங்குதாரர் நிறுவனம் இணைந்து உள்நாட்டில் இந்த நீர்மூழ்கி கப்பல்களை கட்டும். அதே போல, எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் 5,000 மிலன் 2டி ஏவுகணைகளை ராணுவத்திற்காக வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, கப்பல் படைக்கு 111 ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ரூ.21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|