LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசு உயர் அதிகாரிகளின் கையெழுத்து தேவையில்லை: தமிழக அரசு அறிவிப்பு!

அரசு உயர் அதிகாரிகளிற் கையெழுத்து தேவையில்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாணவ, மாணவிகள் உயர் படிப்புக்கு  விண்ணப்பிக்கும் போது சான்றிதழில் அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. 

இப்படி கையெழுத்து வாங்கும்போது சில அதிகாரிகள் அதற்கு பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இதுபோன்று  உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ - மாணவிகள் இனி கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து வாங்க தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து தமிழக நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யு.சி.டேவிதார்  வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: 

குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகள் சான்றிதழ் நகலை உறுதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நேரத்தை மிச்சப்படும் வகையில் இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு தேவையற்ற சங்கடங்களை குறைப்பது, விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கடைசி நேரத்தில் ஏற்படுத்தும் பிரச்னை ஏற்படுத்தாமல் இருப்பது, அலுவலகங்களில் தேவையில்லாத ஆவணங்களை குறைப்பது, சான்று உறுதி வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் ஒரிஜினல் சான்றிதழ் காட்டத் தேவை உள்ளது. அப்போது அரசு அதிகாரிகள் சான்றிதழ்களை உறுதி செய்வதால் கெசட்டட் ஆபீசர் கையெழுத்து பெற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

by   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.