|
|||||
தமிழக அரசு சார்பில் பள்ளி கல்விக்காகவே தனி சேனல்- பொங்கல் முதல் தொடங்குகிறது! |
|||||
தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர் பான தகவல்களை ஒளிபரப்ப தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை பொங்கல் முதல் தமிழக அரசு தொடங்குகிறது. தமிழகத்தில் கல்வித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கவும் அரசு சார்பில், புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதையடுத்து இதற்கான பணி களை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்வித் தொலைக்காட்சி சேனலுக் கான முன்தயாரிப்பு பணிகள் செய்ய, தனியாக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டது. இப்போது கேமிராக்கள் உட்பட தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கல் முதல் சேனலை ஒளிபரப்ப அரசு முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதி காரிகள் கூறியதாவது: இந்தியாவில் கேரளா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. அதுபோல தமிழக மாணவர் களுக்காக சேனல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தளம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாலகத்தின் 8-ம் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக வழக்கமான கேமிராக்களுடன், ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு (ட்ரோன்) கேமிராவும் வாங்கப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக முதல் கட்ட மாக ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. அரசு கேபிளில் 200-ம் அலைவரிசையில் சேனல் ஒளிபரப்பாகும். அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம் பெறும். இதன் மூலம் கல்வித் துறை சார்ந்த அனைத்து செயல் பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். பொங்கல் பண்டிகை முதல் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். |
|||||
by Mani Bharathi on 18 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|