|
|||||
தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! |
|||||
தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி மாலை வரை வேட்புமனு தாக்கல் செய்தனர். 26-ம் தேதி மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, 27ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. வேட்புமனுக்களை வாபஸ் வாங்க 29- ந் தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி பல்வேறு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கினர். இந்த நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார். தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே போல் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார். மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும், இதர கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேட்சைகள் 187 போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதே போல் தென் சென்னையில் 40 பேரும் போட்டியிடுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 31 Mar 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|