|
|||||
மகாபாரத முக்கியத்துவம் வாய்ந்த கொந்தகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கும்! |
|||||
கீழடி அருகே உள்ள மகாபாரத முக்கியத்துவம் வாய்ந்த கொந்தகை கிராமத்தில், விரைவில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை நதிக்கரை நாகரீகத்தை கண்டறியக்கூடிய முயற்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள நிதியில்லை என்ற காரணத்தால் மத்திய தொல்லியல் துறை முன்வரவில்லை. இதனையடுத்து, 47 கோடி ரூபாய் செலவில் 4ம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. எனவே, அடுத்தக்கட்ட அகழாய்வை நடத்த தமிழக தொல்லியல் துறை அனுமதி கேட்டு இருந்தது. இந்த நிலையில், 5ம் கட்ட அகழாய்வை நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதையும், தமிழக தொல்லியல் துறை நடத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கீழடி அருகே விரைவில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5- ம் கட்ட ஆய்வுக்கு கொந்தகை, பசியாபுரம், மாறநாடு உள்ளிட்ட 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த கொந்தகை மகாபாரதத்தில் முக்கியத்துவம் பெற்ற இடம் என்பதால் அங்கு நிறையப் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இதுவரை நடத்தியுள்ள 4 கட்ட அகழ்வாராய்ச்சியில் யானை தந்ததால் ஆன தாயக்கட்டை, உரைக்கிணறு, கட்டிடச்சுவர், மண் பாண்டங்கள் என 6000 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. எனவே 5ம் கட்ட ஆய்வையும் அமர்நாத் குழுவினரே தொடர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. |
|||||
by Mani Bharathi on 25 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|