LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மகாபாரத முக்கியத்துவம் வாய்ந்த கொந்தகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கும்!

கீழடி அருகே உள்ள மகாபாரத முக்கியத்துவம் வாய்ந்த கொந்தகை கிராமத்தில்,  விரைவில்  அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 

வைகை நதிக்கரை நாகரீகத்தை கண்டறியக்கூடிய முயற்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. 

இந்த நிலையில், 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள நிதியில்லை என்ற காரணத்தால் மத்திய தொல்லியல் துறை முன்வரவில்லை. இதனையடுத்து, 47 கோடி ரூபாய் செலவில் 4ம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. 
இந்த நிலையில் மனிதன் வாழ்ந்தது தொடர்பான ஆதாரத்திற்காக 5-ம் கட்ட ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அகழ்வாராய்ச்சி பணிகளின் பலனாக ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும், எலும்புகளும் கிடைத்திருப்பதால், கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். 

எனவே, அடுத்தக்கட்ட அகழாய்வை நடத்த தமிழக தொல்லியல் துறை அனுமதி கேட்டு இருந்தது. இந்த நிலையில், 5ம் கட்ட அகழாய்வை நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதையும், தமிழக தொல்லியல் துறை நடத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கீழடி அருகே விரைவில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5- ம் கட்ட  ஆய்வுக்கு கொந்தகை, பசியாபுரம், மாறநாடு உள்ளிட்ட 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 

இந்த கொந்தகை மகாபாரதத்தில் முக்கியத்துவம் பெற்ற இடம் என்பதால் அங்கு நிறையப் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இதுவரை நடத்தியுள்ள 4 கட்ட அகழ்வாராய்ச்சியில் யானை தந்ததால் ஆன தாயக்கட்டை, உரைக்கிணறு, கட்டிடச்சுவர், மண் பாண்டங்கள் என 6000 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. எனவே 5ம் கட்ட ஆய்வையும் அமர்நாத் குழுவினரே தொடர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

by Mani Bharathi   on 25 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.