|
||||||||
தமிழக முன்னேற்ற முன்னணியின் அரசியல் வரலாறு |
||||||||
தோற்றம்: தமிழக முன்னேற்ற முன்னணி நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி. 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது. புதிய கட்சி தொடங்குதல்: சிவாஜி கணேசன் 1960 களிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஜெயலலிதா அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர். அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். கூட்டணி: ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார். |
||||||||
by Swathi on 29 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|