வருகிற நாடாளுமன்றத்தில்வாக்களித்தது யாருக்கு என்பதை அறியும் நடைமுறை, அனைத்து வாக்குச்சாவடிகளிலுமெ நடைமுறைப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்களித்தது யாருக்கு என்பதை அறிய வி.வி.பி.ஏ.டி. என்ற இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த முறையானது, சோதனை மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் சட்டமன்ற தேர்தல்களில் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முழு அளவில் வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையை அமல்படுத்தப்போவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் 17 லட்சத்து 30 ஆயிரம் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|