LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப் படுகிறது!

ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி-யை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்து உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அன்று காலை 5.27 மணிக்கு அந்த ராக்கெட்டை ஏவத் திட்டமிடப்பட்டு உள்ளது.

 அதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் ஏறத்தாழ நிறைவு அடைந்திருப்பதாகவும், விரைவில் கவுண்ட் டவுன் தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 3-ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்கும் பணிகளில் அந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது. ரிசாட் 2-பி செயற்கைக்கோளில் உயர் தொழில்நுட்பத்தினால் ஆன அதி நவீன இமேஜிங் சாதனம் உள்ளது.

அதன் மூலமாக, புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட  உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக் கோள்களை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த அரங்கில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு ராக்கெட் ஏவப்படுவதற்கு 5 நாட்கள் முன்பு தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

by   on 16 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.