LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பராமரிப்பின்றி இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை!

சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் புத்தர் சிலையை தொல்லியல் துறை எடுத்துப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, சின்னசேலம், கச்சிராய பாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்டைய மன்னர்கள் ஆண்டதற்கான புராதன வரலாறு, கல்வெட்டுக்கள், பண்டைய கோயில்கள், புராதன சிலைகள் என ஏராளம் உண்டு.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புகூட தச்சூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில்  பூமியில் இருந்து சாமி சிலைகள் மேலெழுந்தது குறிப்பிடத் தக்கது.

அதைப்போல சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில், சிவன் கோயில்  உள்ளது.

 இந்த பகுதியை கடந்த 12 ம் நூற்றாண்டில் வாணகோவராயன் என்ற குறுநில மன்னர் ஆறகழூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னரான  மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும் இருந்துள்ளார்.

இவர் சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய மதங்களை ஆதரித்து உள்ளார். இந்த வாணகோவராயன் என்ற மன்னன் உலகியநல்லூரில் சிவன், பெருமாள் கோயிலை கட்டியதுடன், புத்தர் கோயிலையும் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உலகியநல்லூர் கிராமத்தில் சிவன் கோயில், பாழடைந்த பெருமாள் கோயில் இவற்றுக்கு இடையில் உள்ள விவசாய நிலத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய 4 அடி உயர புத்தர் சிலை சம்மணமிட்டு உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலையைச் சுற்றி புற்கள் முளைத்தும், பூமியில் பாதி அளவு மறைந்தும் உள்ளது. இந்த புராதன சிலையின் பெருமை தெரியாத இந்த பகுதி மக்கள் புத்தர் சிலையின் கழுத்தில் கயிறு கட்டி மாடு மேய்க்கின்றனர்.

இந்த சிலையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் வெங்கடேசனும் நேரில் வந்து ஆய்வு செய்து 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை இது என்பதை உறுதி செய்து உள்ளார்.  ஆகையால் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகிய நல்லூரில் உள்ள புத்தர் சிலையை போன்று உள்ள சிலைகளை எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

by Mani Bharathi   on 31 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.