LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
திருக்குறள்  -  கனவுநிலையுரைத்தல்
குறள்: 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
குறள் விளக்கம்
 
குறள்: 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
குறள் விளக்கம்
 
குறள்: 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
குறள் விளக்கம்
 
குறள்: 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
குறள் விளக்கம்
 
குறள்: 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
குறள் விளக்கம்
 
குறள்: 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
குறள் விளக்கம்
 
குறள்: 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
குறள் விளக்கம்
 
குறள்: 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
குறள் விளக்கம்
 
குறள்: 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
குறள் விளக்கம்
 
குறள்: 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
குறள் விளக்கம்