நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர் புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன ஓங்கி புடைபரந்து அமுதம் உள்ளூறி காண்குறி பெருத்து கச்சவை கடிந்தே எழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற்று (5)
அணிபெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின செங்கோல் அரசன் முறைத்தொழில் போல அமுதமும் கடுவும் வாளும் படைத்த மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்ந்தன செய்குறை முடிப்பவர் சென்மம் போலப் (10)
பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன அமுதம் பொடித்த முழுமதி என்ன முகம்வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன இதழியும் தும்பையும் மதியமும் கரந்து வளைவிலை மாக்கள் வடிவு எழுந்தருளி (15)
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால் வீதி கூறி விதித்தமுன் வரத்தால் கருமுகில் விளர்ப்ப அறல்நீர் குளிப்ப கண்புகை யாப்புத் திணிஇருள் விடிய உடல்தொறும் பிணித்த பாவமும் புலர (20)
கண்டநீள் கதுப்பினர் கைகுவி பிடித்து குருகுஅணி செறித்த தனிமுதல் நாயகன் குருகும் அன்னமும் வால்வளைக் குப்பையை அண்டமும் பார்ப்பும் ஆமென அணைக்கும் அலைநீர்ப் பழன முதுநகர்க் கூடல் (25)
ஒப்படைத்து ஆயஇப் பொற்றொடி மடந்தை அணங்கினள் ஆம்என நினையல் பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே. (28)
|