|
||||||||
தென்பாங்கு |
||||||||
தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை
ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி
அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது
தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர்.
கருத்து : தண்டமிழ் நாட்டு மண்ணின் தனித்த மணத்தைச் சிறப்புற தமிழ்ச் சிந்துப் பாடலின் ஓசையில் காட்டி பலவகைப்பட்ட அடிகளிலும் இயைபுத் தொடை அமையப் பாடுவது தென்பாங்கு என்று செந்தமிழ் வல்லோர் சொல்வார்கள்.
விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது.
தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்..
காட்டு : (1)
மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம்
மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும்
குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே
(தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276)
காட்டு : (2)
கொலைசெய்யப் போறே னென்று
கோதையிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம்பாளும்
என்ன செய்தானய்யா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா.
(சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)
தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர். கருத்து : தண்டமிழ் நாட்டு மண்ணின் தனித்த மணத்தைச் சிறப்புற தமிழ்ச் சிந்துப் பாடலின் ஓசையில் காட்டி பலவகைப்பட்ட அடிகளிலும் இயைபுத் தொடை அமையப் பாடுவது தென்பாங்கு என்று செந்தமிழ் வல்லோர் சொல்வார்கள்.
விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது.
தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்..
காட்டு : (1) மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம் மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும் குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே (தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276) காட்டு : (2) கொலைசெய்யப் போறே னென்று கோதையிடம் கூறிடவே மலைபோல நின்றாள் சிறு மங்கை இளம் பாலாம்பாளும் என்ன செய்தானய்யா - அதை எடுத்துரைப்பாய் மெய்யா. (சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|