LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

தெரு விளக்கு

 

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.
தனிமையாக,  ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று
வாழ்ந்து வந்தது.
இளமை,  மூப்பு,  சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும்
உரிமையில்லை. எனவே,  தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.
நிற்கும் கல் – உடம்பு சிறிது சாய்ந்துவிட்டது. சிரத்தில் இருந்த
கண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்துவிட்டது. அந்தச் சிறுவன்
விளையாட்டாகக் கல்லை எறிந்தபொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?
காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த்
துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!
கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்கு
நன்றி இருக்கிறதா?
போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?
அது காற்றிற்குத் தெரியுமா?
இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்துவிட
வேண்டுமாம்!
அதற்கு ஒரு தோழன் – ஒரு கிழவன்.
ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசியம்!
விளக்கிற்குக் கிழவன்.
கிழவனுக்கு விளக்கு.
விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.
அவனுக்கு எப்படித் தெரியும்.
அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?
வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?
தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன
நிம்மதியை அளித்தது.
அன்று சாயங்காலம் வந்தான்.
வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.
இருள்! இருள்!!
பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!
அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய்,  அர்த்த மற்றதாய்
இருந்தது.
சாந்தி?
அது எங்கிருந்து வரும்!
உடைந்த தெரு விளக்குத்தான்! அனால்,  கொஞ்சமாவது அவனைத்
தேற்றிவந்ததே!
வெளிச்சமில்லாவிட்டாலும் ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங்
கல்லாவது இருந்ததே?
மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.
.……………………………………………………
இப்பொழுது ஒரு புது விளக்கு!
மின்சார விளக்கு!
அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?
ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!
அதற்கென்ன?
எங்கும்இ எப்பொழுதும் அப்படித்தான்.
பழையன கழியும்இ புதியன வரும்.
இது உலக இயற்கையாம்!

                தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.தனிமையாக,  ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்றுவாழ்ந்து வந்தது.இளமை,  மூப்பு,  சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும்உரிமையில்லை. எனவே,  தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.நிற்கும் கல் – உடம்பு சிறிது சாய்ந்துவிட்டது. சிரத்தில் இருந்தகண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்துவிட்டது. அந்தச் சிறுவன்விளையாட்டாகக் கல்லை எறிந்தபொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த்துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்குநன்றி இருக்கிறதா?போய்விட்டது!

 

                 பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?அது காற்றிற்குத் தெரியுமா?இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்துவிடவேண்டுமாம்!அதற்கு ஒரு தோழன் – ஒரு கிழவன்.ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசியம்!விளக்கிற்குக் கிழவன்.

 

            கிழவனுக்கு விளக்கு.விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.அவனுக்கு எப்படித் தெரியும்.அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மனநிம்மதியை அளித்தது.அன்று சாயங்காலம் வந்தான்.வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.

 

               இருள்! இருள்!!பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய்,  அர்த்த மற்றதாய்இருந்தது.சாந்தி?அது எங்கிருந்து வரும்!உடைந்த தெரு விளக்குத்தான்! அனால்,  கொஞ்சமாவது அவனைத்தேற்றிவந்ததே!வெளிச்சமில்லாவிட்டாலும் ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங்கல்லாவது இருந்ததே?மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.

 

                  இப்பொழுது ஒரு புது விளக்கு!மின்சார விளக்கு!அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!அதற்கென்ன?எங்கும்இ எப்பொழுதும் அப்படித்தான்.பழையன கழியும்இ புதியன வரும்.இது உலக இயற்கையாம்!

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.