LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

தேர்வு ...

என்னை

ஒவ்வொரு நாளும்

எழவைத்துப்

படிக்கச் சொன்ன

அந்தக் கடிகாரத்துக்கு

நிச்சயமாய்

இந்த விசயம்

தெரிந்திருக்க

வாய்ப்பில்லை ...


நான்

முகம் கழுவியபோது

தேனீரோடு

காத்திருந்த

என் தாய்க்கும்

இந்த விசயம்

பரிச்சயமில்லை ...


என்

தந்தையின்

கட்டுப்பாடுகளுக்கு

இந்த நியதிகள்

புரிந்திருக்க

நியாயமில்லை ...


என்னோடு

சேர்ந்து படித்த

இந்த மேஜை

நாற்க்காலிகள் கூட

இது பற்றி

என்னிடம்

வாய் திறக்கவில்லை ....


காலையில்

மாலையில்

அதிகாலையில்

அந்தி நேரத்தில்

எனக்கு

அறிவு பரிமாறிய

அந்தப் புத்தகங்கள் கூட

இந்த விசயத்தை

என்னிடம்

சொன்னதில்லை ...


நான்

படித்த போது

இதுபற்றி

யோசித்ததேயில்லை ....


நான்

கற்றுக்கொண்டபோது

எனக்குள்

இந்த விசயம் பற்றி

அவ்வளவு

ஞானமில்லை ....


தேர்வு

முடிந்தது ...


“ திருத்தும் பணி

தொடங்கியது “

செய்தி வந்தது ....


ஒரு நாளைக்கு

முப்பது பேப்பர்கள் ...


திருத்தும் ஆசிரியருக்கு

ஒரு பேப்பருக்கு

பதினைந்து ரூபாய்

உபகாரச் சம்பளம்” ...


இது

உபரிச் செய்தி ...


என் அறிவு

அடுத்த

பதினைந்து ரூபாய்

பார்க்கும் ஆசையில்

அலட்சியப் படுத்தப் பட்டது ....


முடிவுக்கு

காத்திருந்தேன் ....


என் எண்

விடுபட்டிருந்தது ...


என்

கண்களில்

இரத்தம் வந்தது ...


“ அந்தப் பேப்பர்

நன்றாய்

எழுதியிருந்தேனே “

வினாத் தொடுத்தேன் ...


இதெல்லாம்

இங்கே சாதாரணம் ...


மறுமதிப்பீட்டுக்கு

மனுப்போடு ...


பேப்பருக்கு

இருநூற்று இருபத்தியந்து

ரூபாய் கட்டு ...

பதில் வந்தது...


பணமாய்ப்போன

கல்விச் சந்தையில்

இது சாதாரணம் ...


எனக்கு

இது ரணம் ...


என் மானம்...

அவ மானம்....


உள்மனம்

அழுதது....


அழுத கண்ணீர்

என் மீசை

நனைந்தது....


வயது கடந்தும்

என்னை

குழந்தையாக்கியது...


என்னை

எனக்கு

எதிரியாக்கியது .....


எனக்குள்

குற்ற உணர்வு

குறுகுறுத்தது ....


அந்தப்

பதினைந்து ரூபாய்

என்னைப் பார்த்தது

சிரித்தது ..


நிச்சயமாய்

என்னை

ஒவ்வொரு நாளும்

எழவைத்துப்

படிக்கச் சொன்ன

அந்தக் கடிகாரத்துக்கு

இந்த விசயம் ....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.