LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

 

தில்லையில் உள்ள சிவகாமியம்மை மீது ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் அருளியது தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை ஆகும். 
நூல்
நேரிசை வெண்பா
சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்
கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்
ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய
வைய மொருங்கீன்ற மான். 1
கட்டளைக் கலித்துறை
மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே
ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த
ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே. 2
நேரிசை வெண்பா
அங்கம் பகுந்தளித்த்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை
வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு. 3
கட்டளைக் கலித்துறை
ஒருவல்லி யல்லிக் கமலத்து
ளூறுபைந் தேறலொத்த
திருவல்லி தில்லைச் சிவகாம
வல்லியென் சித்தத்துள்ளே
வருவல்லி செம்பொன் வடமேரு
வில்லியை வாட்கணம்பாற்
பொருவல்லி பூத்தலி னன்றேயிப்
பூமியைப் பூவென்பதே.
4
நேரிசை வெண்பா
பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம்
காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர்
பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்க
ஆடுகின்ற வேதமே யங்கு. 5
கட்டளைக் கலித்துறை
அங்கைகொண் டேநின் னடிதைவந்
தாரழ லாறமுடிக்
கங்கைகொண் டாட்டுநங் கண்ணுத
லாரக் கனகவெற்பைச்
செங்கைகொண் டேகுழைத் தார்சிவ
காமிநின் சித்திரமென்
கொங்கைகொண் டேகுழைத் தாயவர்
பொற்புயக் குன்றெட்டுமே.
6
நேரிசை வெண்பா
குன்றஞ் சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன்
மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ்
வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல்
முரைசன்றே வென்றி முரசு. 7
கட்டளைக் கலித்துறை
முருந்தடர்ந் தார முகிழ்த்தபுன்
மூரன் முதல்விகயல்
பொருந்தடங் கண்விழிக் கும்புலி
யூரர்பொன் மார்பின்மற்றுன்
பெருந்தடங் கொங்கை குறியிட்ட
வாகண்டப் பிஞ்ஞகர்க்குன்
கருந்தடங் கண்ணுங் குறியிட்ட
போலுங் கறைக்கண்டமே.
8
நேரிசை வெண்பா
கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று
மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்
டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர்
மயிலிருக்கத் தில்லை வனத்து. 9
கட்டளைக் கலித்துறை
வன்னஞ் செறிவளைக் கைச்சிற
காற்றன் வயிற்றினுள்வைத்
தின்னஞ் சராசர வீர்ங்குஞ்
சணைத்திரை தேர்ந்தருத்திப்
பொன்னம் பலத்துளொ ரானந்த
வாரிபுக் காடும்பச்சை
அன்னம் பயந்தன கொல்லாம்பல்
லாயிர வண்டமுமே.
10
நேரிசை வெண்பா
அண்டந் திருமேனி யம்பல்த்தார்க் கென்பதுரை
கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில்
விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ
வண்ணம் பொலிந்திருந்த வா. 11
கட்டளைக் கலித்துறை
வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென்
றேதில்லை வாணரம்மே
காய்ந்தது வென்றிவிற் காமனை
யேமுடிக் கங்கையைப்பின்
வேய்ந்தது பாவநின் மென்பதந்
தாக்கவவ் வெண்மதியும்
தேய்ந்தது பெண்மதி யென்படு
மோவச் சிறுநுதற்கே.
12
நேரிசை வெண்பா
சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை
மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த
ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம்
நண்ணுதலைக் கண்ணுதலே நன்று. 13
கட்டளைக் கலித்துறை
நங்காய் திருத்தில்லை நன்னுத
லாய்நுத னாட்டமொத்துன்
செங்காவி யங்கண் சிவப்பதென்
னேசெழுங் கங்கையைநின்
பங்காளர் நின்னைப் பணியுமப்
போதுகைப் பற்றிமற்றென்
தங்கா யெழுந்திரென் றாலவட்
கேது தலையெடுப்பே.
14
நேரிசை வெண்பா
தலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும்
குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள்
நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும்
தான்குமரி யாகியிருந் தாள். 15
கட்டளைக் கலித்துறை
தாளிற் பதித்த மதித்தழும்
புக்குச் சரியெம்பிரான்
தோளிற் பதித்த வளைத்தழும்
பேதொல்லைத் தில்லைப்பிரான்
வாளிற் பதித்த முலைத்தழும்
பங்கவர் மார்பினிலந்
நாளிற் பதித்ததொன் றேயெம்
பிராட்டி நடுவின்மையே.
16
நேரிசை வெண்பா
இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதலை கற்பிக்கும்
பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம்
பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள்
ஆகத் திருந்தா ளவள். 17
கட்டளைக் கலித்துறை
அல்லிக் கமலத் துணைத்தாள
தென்றுமென் னாவிக்குள்ளே
புல்லிக் கிடந்தது போலுங்கெட்
டேன்புன் மலக்கிழங்கைக்
கல்லிப் புலக்களை கட்டருள்
பூத்துட் கனிந்தமலை
வல்லிக் கிலைகொன் மருங்கென்
றிரங்கு மறைச்சிலம்பே.
18
நேரிசை வெண்பா
மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்
பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும்
நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின்
தாட்கமலஞ் சூடத் தரின். 19
கட்டளைக் கலித்துறை
தருவற நாணத் திருவறச்
சாலை சமைத்தம்மைநீ
பொருவறு நல்லறம் பூண்டதென்
னாமெந்தை பொற்புலியூர்
மருவறு மத்த முடித்துக்
கடைப்பலி தேர்ந்துவம்பே
தெருவற வோடித் திரிதரு
மான்மற்றுன் சீர்த்திகொண்டே.
20
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை முற்றிற்று.

தில்லையில் உள்ள சிவகாமியம்மை மீது ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் அருளியது தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை ஆகும். 
நூல்

நேரிசை வெண்பா
சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசியவைய மொருங்கீன்ற மான். 1

கட்டளைக் கலித்துறை
மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமேஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்தஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே. 2

நேரிசை வெண்பா
அங்கம் பகுந்தளித்த்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனைவந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிருஉந்திப்பா ரேழு மொருங்கு. 3

கட்டளைக் கலித்துறை
ஒருவல்லி யல்லிக் கமலத்துளூறுபைந் தேறலொத்ததிருவல்லி தில்லைச் சிவகாமவல்லியென் சித்தத்துள்ளேவருவல்லி செம்பொன் வடமேருவில்லியை வாட்கணம்பாற்பொருவல்லி பூத்தலி னன்றேயிப்பூமியைப் பூவென்பதே.4

நேரிசை வெண்பா
பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம்காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர்பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்கஆடுகின்ற வேதமே யங்கு. 5

கட்டளைக் கலித்துறை
அங்கைகொண் டேநின் னடிதைவந்தாரழ லாறமுடிக்கங்கைகொண் டாட்டுநங் கண்ணுதலாரக் கனகவெற்பைச்செங்கைகொண் டேகுழைத் தார்சிவகாமிநின் சித்திரமென்கொங்கைகொண் டேகுழைத் தாயவர்பொற்புயக் குன்றெட்டுமே.6

நேரிசை வெண்பா
குன்றஞ் சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன்மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ்வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல்முரைசன்றே வென்றி முரசு. 7

கட்டளைக் கலித்துறை
முருந்தடர்ந் தார முகிழ்த்தபுன்மூரன் முதல்விகயல்பொருந்தடங் கண்விழிக் கும்புலியூரர்பொன் மார்பின்மற்றுன்பெருந்தடங் கொங்கை குறியிட்டவாகண்டப் பிஞ்ஞகர்க்குன்கருந்தடங் கண்ணுங் குறியிட்டபோலுங் கறைக்கண்டமே.8

நேரிசை வெண்பா
கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்றுமறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர்மயிலிருக்கத் தில்லை வனத்து. 9

கட்டளைக் கலித்துறை
வன்னஞ் செறிவளைக் கைச்சிறகாற்றன் வயிற்றினுள்வைத்தின்னஞ் சராசர வீர்ங்குஞ்சணைத்திரை தேர்ந்தருத்திப்பொன்னம் பலத்துளொ ரானந்தவாரிபுக் காடும்பச்சைஅன்னம் பயந்தன கொல்லாம்பல்லாயிர வண்டமுமே.10

நேரிசை வெண்பா
அண்டந் திருமேனி யம்பல்த்தார்க் கென்பதுரைகொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில்விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோவண்ணம் பொலிந்திருந்த வா. 11

கட்டளைக் கலித்துறை
வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென்றேதில்லை வாணரம்மேகாய்ந்தது வென்றிவிற் காமனையேமுடிக் கங்கையைப்பின்வேய்ந்தது பாவநின் மென்பதந்தாக்கவவ் வெண்மதியும்தேய்ந்தது பெண்மதி யென்படுமோவச் சிறுநுதற்கே.12

நேரிசை வெண்பா
சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லைமறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்தஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம்நண்ணுதலைக் கண்ணுதலே நன்று. 13

கட்டளைக் கலித்துறை
நங்காய் திருத்தில்லை நன்னுதலாய்நுத னாட்டமொத்துன்செங்காவி யங்கண் சிவப்பதென்னேசெழுங் கங்கையைநின்பங்காளர் நின்னைப் பணியுமப்போதுகைப் பற்றிமற்றென்தங்கா யெழுந்திரென் றாலவட்கேது தலையெடுப்பே.14

நேரிசை வெண்பாதலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும்குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள்நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும்தான்குமரி யாகியிருந் தாள். 15

கட்டளைக் கலித்துறை
தாளிற் பதித்த மதித்தழும்புக்குச் சரியெம்பிரான்தோளிற் பதித்த வளைத்தழும்பேதொல்லைத் தில்லைப்பிரான்வாளிற் பதித்த முலைத்தழும் பங்கவர் மார்பினிலந்நாளிற் பதித்ததொன் றேயெம்பிராட்டி நடுவின்மையே.16

நேரிசை வெண்பா
இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதலை கற்பிக்கும்பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம்பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள்ஆகத் திருந்தா ளவள். 17

கட்டளைக் கலித்துறை
அல்லிக் கமலத் துணைத்தாளதென்றுமென் னாவிக்குள்ளேபுல்லிக் கிடந்தது போலுங்கெட்டேன்புன் மலக்கிழங்கைக்கல்லிப் புலக்களை கட்டருள்பூத்துட் கனிந்தமலைவல்லிக் கிலைகொன் மருங்கென்றிரங்கு மறைச்சிலம்பே.18

நேரிசை வெண்பாமறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும்நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின்தாட்கமலஞ் சூடத் தரின். 19

கட்டளைக் கலித்துறை
தருவற நாணத் திருவறச்சாலை சமைத்தம்மைநீபொருவறு நல்லறம் பூண்டதென்னாமெந்தை பொற்புலியூர் மருவறு மத்த முடித்துக்கடைப்பலி தேர்ந்துவம்பேதெருவற வோடித் திரிதருமான்மற்றுன் சீர்த்திகொண்டே.20


தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.