LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

திம்மன் ஆவல்

தென்பாங்கு-கண்ணிகள்

காலை உணவருந்திச் - சுதரிசன்
    காய்ச்சிய பால்பருகி
    ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில்
    ஓய்ந்து படுத்திருந்தான்.
    'வேலை கிடைக்கும்என்றீர் - உடனே
    விண்ணப்பம் போடுவதா?
    நாலைந்து நாட்களுக்குப் - பிறகு
    நான்அங்கு வந்திடவா?'

    என்றுதிம் மன்வினவச் - சுதரிசன்
    'யாவும் முடித்துவிட்டேன்;
    இன்று கிளம்பிவந்தால் - நல்லபயன்
    ஏற்படும் அட்டிஇல்லை.
    ஒன்றும் பெரிதில்லைகாண் - திம்ம,நீ
    ஊருக்கு வந்தவுடன்
    மன்னர் இடத்தினிலே - உன்னையும்
    மற்றுன் மனைவியையும்

    காட்டி முடித்தவுடன் - கட்டளையும்
    கையிற் கிடைத்துவிடும்.
    வீட்டுக்கு நீவரலாம் - சிலநாள்
    வீட்டிலே தங்கியபின்
    போட்ட தலைப்பாகை - கழற்றிடப்
    போவதில் லைநீதான்;
    மாட்டிய சட்டையினைக் - கழற்றியும்
    வைத்திடப் போவதில்லை.

    எண்பது பேருக்குநான் - உதவிகள்
    இதுவ ரைக்கும்செய்தேன்;
    மண்ணில் இருப்பவர்கள் - நொடியினில்
    மாய்வது திண்ணமன்றோ!
    கண்ணிருக் கும்போதே - இவ்வரிய
    கட்டுடல் மாயுமுன்னே
    நண்ணும் அனைவருக்கும் - இயன்றிடும்
    நன்மைசெய் தல்வேண்டும்.

    வண்டியினை அமர்த்து - விரைவினில்
    மனைவி யும்நீயும்
    உண்டி முடிந்தவுடன் - வண்டிதான்
    ஓடத் தொடங்கியதும்
    நொண்டி எருதெனினும் - செஞ்சியினை
    நோக்கி நடத்துவித்தால்
    கண்டிடும் பத்துமணி - இரவினில்
    கட்டாயம் செஞ்சிநகர்.

    வீட்டையும் பேசிவிட்டேன் - இருவரை
    வேலைக் கமைத்துவிட்டேன்;
    கோட்டையிற் சிப்பாயாய் - அமரும்
    கொள்கையி லேவருவார்
    காட்டு மனிதர்அல்லர் - என்றுநான்
    கண்டித்துப் பேசிவிட்டேன்.
    கேட்டு மகிழ்ந்தார்கள் - நிழல்போல்
    கிட்ட இருப்பார்கள்.'

    திம்மன் இதுகேட்டான் - கிளம்பிடத்
    திட்டமும் போட்டுவிட்டான்!
    'பொம்மை வரும்'என்றதும் - குழந்தைகள்
    பூரித்துப் போவதுபோல்
    'உம்'என்று தான்குதித்தான் - விரைவினில்
    உண்டிட வேண்டுமென்றான்.
    அம்முடி வின்படியே - தொடங்கினர்
    அப்பொழு தேபயணம்!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.