LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

திம்மன் நான் என்றான்

எண்சீர் விருத்தம்

'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
    'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள்.
    'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன்.
    'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன்.
    'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
    சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான்.
    திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி.
    தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.

    பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப்
    போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
    மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த
    மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான்.
    'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்;
    செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன்
    வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
    வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.

    இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான்.
    'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்!
    'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்!
    'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான்.
    'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன்.
    'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன்.
    பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன்.
    'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே

    பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன்.
    'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன்.
    'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத்
    தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்!
    *நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
    நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன்
    கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
    கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.

    *இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.

    'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
    அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்!
    தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
    தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
    அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை
    அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்!
    தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
    தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்

    நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை.
    நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
    தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
    தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக
    வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
    வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
    தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா?
    சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.

    அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன்
    இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்.
    குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
    கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள்.
    பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
    பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ்
    தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்
    சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.